Saturday, January 1, 2011

சென்னை புத்தக கண்காட்சி 2011 - கீழைக்காற்று நூல்கள்

Chennai Book Fair 2011 சென்னைப் புத்தகக் கண்காட்சி 2011 ஜனவரி 4 முதல் 17 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் ஆங்கில இந்திய மேல்நிலை பள்ளியில் நடை பெற உள்ளது. பணிக்கு மட்டுமே படிப்பது படிப்பன்று. வாழ்க்கைக்காக படிப்பதே படிப்பு. நம்முள் பெரும்பாலோனோர் பள்ளி, கல்லூரிகளை தாண்டிய உடன் படிப்பதில்லை. தொடர்ச்சியான வாசிப்பு மட்டுமே வாழ்க்கைக்கு தேவையான சிந்தனைகளை வழி காட்டும். அப்படிப்பட்ட புத்தகங்களை தேடிப் படிக்க நல்வாய்ப்பாக புத்தகக் கண்காட்சிகள் திகழ்கின்றன. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் கடை விரித்தாலும் அவற்றுள் நமது அறிவுச் சாளரங்களை திறக்கும் நூல்கள் கீழைகாற்று வெளியீட்டகத்தில் கிடைக்கும். கீழைக்காற்று அரங்கத்தின் எண் 39-40 இல் கிடைக்கும் நூல்களுள் சில;

புதிய கலாச்சாரம் / வினவு நூல்கள்:
  • விடுதலைப் போரின் வீர மரபு
  • பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்
  • நினைவின் குட்டை கனவு நதி
  • மீண்டும் தொழிலாளி வர்க்கம்
  • நிஜத்தின் உரைகல்லில் நிழல் சினிமா

மார்க்சியம்-லெனினியம் கற்க, மாவோ சிந்தனை வழி நிற்க;
  • கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கல்ஸ் முக்கிய நாட்குறிப்புகள்
  • லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்
  • அராஜகவாதமா? சோசலிசமா?
  • கம்யூனிசக் கொடியின் கீழ்...
  • முரண்பாடு பற்றி

ஏகாதிபத்திய மேலாதிக்க பயங்கரவாதத்தை இனங்காட்டும் நூல்கள்:
  • அருந்ததி ராய் / கரன் தபார் விவாதம்
  • ஈராக்: வரலாறும் அரசியலும்
  • இலங்கை: தேசிய இனப் பிரச்சினையும் தீர்வுக்கான தேடல்களும்
  • ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா
  • மறுகாலனியாதிக்கக் கொலைக்களங்கள் (கவிதை)

மதம் / பார்ப்பன மதவெறிப் பயங்கரத்தை அறியத் தரும் நூல்கள்:
  • மதம் : ஒரு மார்சியப் பார்வை
  • நான் நாத்திகன் ஏன்?
  • தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் வளர்ந்தது எப்படி?
  • இந்து என்று சொல்லாதே! ராமன் பின்னே செல்லாதே! (கவிதை)
  • ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தின் ஆரிய-பார்ப்பன சாம்ராஜ்யக் கனவை தகர்த்தெறிவோம்!

Keezhaikattru Books - Chennai Book Fair 2011
தொடர்புடைய பதிவுகள்: