Monday, January 14, 2013

சென்னை புத்தகக் கண்காட்சி 2013 - சில கடைகள், சில புத்தகங்கள்

சென்ற ஆண்டு 8 இலட்சம் பேர் புத்தகக் காட்சியினை பார்வையிட்டனர். இந்த ஆண்டு 12 இலட்சம் பேர் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இலட்சக்கணக்கில் பார்வையாளார்களை கொண்ட சென்னை புத்தகக் கண்காட்சி வருடாவருடம் திருவிழா போல களை கட்டுகிறது. இந்த வருடம் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சி கல்லூரி மைதானத்தில்,  ஜனவரி11 முதல் ஜனவரி23 வரை நடைபெறுகிறது.

பொதுவாக‌ புத்தகக் கண்காட்சியில் சிறுவர்களுக்கான புத்தகங்கள், சுயமுன்னேற்ற புத்தகங்கள், துறை சார்ந்த புத்தகங்கள் மட்டுமே வாங்குகிறோம். சமூகத்தைப் பற்றியும் அதன் இயக்கத்தை பற்றியுமான புத்தகங்களை பெருமளவில் வாங்குவதில்லை. இதன் காரணமாக நமக்கு தினசரி நடக்கும் நமது பிரச்சனைகளுக்கான காரணம் தெரிவதில்லை. பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தும் ஊடகங்களின் கருத்தையே சரியென நம்புகிறோம்.

சிறுவயது முதல் மதிப்பெண்களுக்காக, வேலை பெறுவதற்காக பெரும்பாலும் படிக்கிறோம். அதற்கப்பால் படிக்கும் பழக்கம் நின்று போய்விடுகிறது. அப்படியே படித்தாலும் தினசரி பத்திரிக்கை மற்றும் ஜனரஞ்சக பத்திரிக்கைகள், சில நாவல்கள் மட்டும் தான். இந்த புத்தகக் கண்காட்சியில் இருந்து, சமூக அக்கறையுள்ள புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வோம். சமூக முன்னேற்றத்திற்கு துணை நிற்போம்.


சில புத்தக கடைகள்:

ஐநூறுக்கும் மேற்பட்ட கடைகள் சென்னை புத்தகக் கண்காட்சியில் இடம் பெற உள்ளன. அவற்றுள் சமூக அக்கறையுள்ள நூல்கள் கிடைக்கும் கடைகளின் எண்கள்;

தமிழ்மண் - 10, 11
தோழமை வெளியீடு - 87
பொன்னி – 149
பெரியார் சுயமரியாதை வெளியீடு – 227
காலச்சுவடு - 242
தமிழ்ப் புத்தகாலயம் – 336
அடையாளம் - 355, 356
நியூ செஞ்சுரி புத்தக நிலையம் - 367
பாரதி புத்தகாலயம் – 460, 461
விடியல் – 516, 517
அலைகள் - 550
கீழைக்காற்று – 551, 552
அம்பேத்கர் ஃபவுண்டேஷன்ஸ் - 571
கருப்புப் பிரதிகள் - 572

 சில புத்தகங்களின் பட்டியல்;
சினிமா: திரை விலகும்போது… – சினிமா விமர்சனங்கள்
“பாரதி”ய ஜனதா பார்ட்டி – வே.மதிமாறன்
பாரதி பக்தர்களின் கள்ள மெளனம் – தோழர். மருதையன்

வால்காவிலிருந்து கங்கை வரை – ராகுல் சாங்கிருத்தியாயன்
பொதுவுடமை என்றால் என்ன? – ராகுல் சாங்கிருத்தியாயன்
ஆப்பிரிக்கர்கள் கண்டு பிடித்த இருண்ட ஐரோப்பா – கலையரசன்

விடுதலைப் போரின் வீரமரபு  - புதிய கலாச்சாரம்
பண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன்
நான் ஏன் இந்து அல்ல – காஞ்சா அய்லய்யா
இந்து இந்தியா – எஸ்.வி.ராஜதுரை

நான் நாத்திகன் ஏன்? – பகத்சிங்
கம்யூனிசக் கொடியின் கீழ் – ஜூலியஸ் ஃபூசிக்
தூக்கு மேடைக் குறிப்பு – ஜூலிஸ் பூசிக்
போராடும் தருணங்கள் – தோழர் மருதையன்
உலகை குலுக்கிய பத்து நாட்கள் – ஜான் ரீடு
மாவோவின் நெடும்பயணம்  (THE LONG MARCH) – DICK WILSON

புதினங்கள்:
வீரம் விளைந்தது - நிக்கலாய் ஒஸ்திரோஸ்கி
கன்னி நிலம் - மிக்கேல் ஷோலகவ்
ஏழு தலைமுறை - அலெக்ஸ் ஹேலி
ஸ்பார்ட்டகஸ்
சூறாவளி (சீன நாவல்)

வினவு நூல்கள்:
ஜீன்ஸ் பேண்டும் பாலியல் வன்முறையும் – வினவு
ஐ.டி.துறை நண்பா… – வினவு
கடவுள் கைது பக்தன் விடுதலை – வினவு
மும்பை 26/11 விளக்கமும் விவாதமும் – வினவு
சாதியம் ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் ! – வினவு
இலக்கிய மொக்கைகள் – வினவு



தொடர்புடைய பதிவுகள்:

3 comments:

ஊரான் said...

நல்ல பல தகவல்கள்.

புத்தகக் கண்காட்சி: எதற்காக?
http://www.hooraan.blogspot.com/2013/01/blog-post.html
இந்த ஆண்டு 750 அரங்குகள் - 10 இலட்சம் தலைப்புகள் 1 கோடி புத்தகங்கள் - சென்ற ஆண்டு ரூ12 கோடிக்கு விற்பனை என சென்னையில் நடைபெற்று வரும் 36 வது புத்தகக் கண்காட்சி பற்றி தொலைக்காட்சி ஊடகங்கள் ஏற்படுத்தும் பரபரப்பைப் பார்க்கும் போது எழுத்துலகில் ஒரு மொபெரும் புரட்சி நடப்பதைப் போன்ற ஒரு பிரமிப்புதான் பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.

ஆதன் said...

தேவையான கருத்துகள், தகவல்கள்

பதிவிட்டமைக்கு நன்றி

சுனா பானா said...

நன்றி ஆதன், ஊரான்.