Thursday, July 23, 2009

அண்ணா பல்கலைக்கழகம் - தனியார் கல்லூரிகளின் ஏஜென்டாக செயல்படுகிறது

பள்ளி கல்லூரிகளில் நடக்கும் கட்டணக் கொள்ளையை அம்பலபடுத்தியும், எதிர்த்தும் புமாஇமு தொடர்ச்சியாக போராடி வருகிறது. கல்வியை முழுமையாக தனியார்மயப் படுத்தி கல்வியை ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களுக்கு எட்டாக்கனியாக்கி வருகிறது அரசு. கல்வி பெறுவது நமது உரிமை. கல்வி கொள்ளையர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும். கல்வியை அரசே ஏற்று நடத்த வேண்டும். அரசை நிர்பந்த்திக்க மாணவர்கள் ஓர் வர்க்கமாய் அணி திரள அழைக்கிறது புமாஇமு. அண்ணா பல்கலைக்கழகம் தனியார் கல்லூரிகளின் ஏஜென்டாக செயல்படுவதை கண்டித்து புமாஇமு-வின் சுவரொட்டி.

Against Anna_University acting as private colleges agent - RSYF Poster

தமிழக அரசே!
  • ஐவர் குழுவின் அதிரடி சோதனை என்று நாடகமாடாதே!
  • கல்லூரி முதல்வரின் வாக்குமூலத்தை ஆதாரமாகக் கொண்டு மாதா பொறியியல் கல்லூரியை அரசே ஏற்று நடத்து!
  • கட்டணக் கொள்ளையடித்தும் - இன்டர்னல் மார்க்கை ஜீரோ போட்டும் மாணவர்களை மிரட்டி நிரந்தர அடிமையாக்கும் பனப்பாக்கம் கிருஷ்ணா போன்ற கல்லூரிகளையும் அரசுடைமையாக்கு!

மாணவர்களே!
  • எதிர்காலம் என்று கொத்தடிமையாக இருப்பது அவமானம்!
  • தனியார் கொள்ளையை ஒழிக்க மாணவர்கள் ஒரு வர்க்கமாய் அணிதிரண்டு போராடுவதே தன்மானம்!

Related Links:

No comments: