Monday, December 29, 2008

இந்தியா திவாலை நோக்கி - இன்சூரன்சு துறையில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு!

அமெரிக்காவின் கடன் சுமையை மூன்றாம் உலக நாடுகளுக்கு (ஆசியா, ஆப்ரிக்கா, தென்னமெரிக்கா) ஏற்றுமதி செய்கிறது. அதை கைக்கூலி, அடிமைகளான மன்மோகன் - சோனியா கும்பல் இந்தியாவில் அமுல்படுத்துகிறது. அதிகப்படியான, வரைமுறையற்ற தாரளாமயம், தனியார்மயம் ஆகியவற்றால் பன்னாட்டு நிறுவனங்கள் திவால் ஆகின. ஏற்கனவே தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கைகளால் இந்தியா சூறையாடப்பட்டு வருகிறது. இப்போது இந்திய மக்களின் சேமிப்புகளான PF, இன்சுரன்சு அகியவை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அள்ளி கொடுக்கப்படுகிறது.

இன்சுரன்சு துறையில் அந்நிய முதலீடு அதிகரிப்பு அம்பலபடுத்தும் புஜதொமு-வின் சுவரொட்டி பின்வருமாறு.

Increasing FDI in Insurance by Manmohan-Sonia - Poster by NDLF

இன்சூரன்சு துறையில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு!
மன்மோகன் - சோனியா கும்பலின் அந்நிய கைக்கூலித்தனம்!

  • உலகம் முழுவதும் பன்னாட்டு இன்சூரன்சு நிறுவனங்கள் திவாலாகுது அவர்களுக்கு உயிர் கொடுக்க மன்மோகன் அரசு இந்தியாவில் கதவை திறக்குது!
  • எல்.ஐ.சி, ஜி.ஐ.சி, பொதுத்துறை நிறுவனங்களை அழிக்க துடிக்குது!
  • இந்திய மக்களின் சேமிப்பை பன்னாட்டு முதலாளிகள் சூறையாட அனுமதிக்குது!
  • தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்னும் மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்!

1 comment:

Anonymous said...

bush got shoe, Manmohan will get?????