Showing posts with label ஆர்ப்பாட்டம். Show all posts
Showing posts with label ஆர்ப்பாட்டம். Show all posts

Saturday, December 6, 2008

சட்டக்கல்லூரிகளை உடனே திற - புமாஇமு கண்டன ஆர்ப்பாட்டம்

RSYF demonstration at Chennai Memorial Hall - Open Law Colleges

சென்னை மெமோரியல் ஹால், GH எதிரில் 3- 12- 2008 அன்று மாலை 4.30 மணியளவில் புமாஇமு அமைப்பினர், மூடிய சட்டக்கல்லூரிகளை உடனே திற என்ற முழக்கத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் முழக்கங்கள்:
  • சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களிடையேயான மோதலையொட்டி மூடிய சட்டக்கல்லூரிகளை உடனே திற!
  • தலித் மாணவர்களை சாதியைச் சொல்லி இழிவுபடுத்தி, தீண்டாமை குற்றம் செய்த முக்குலத்தோர் மாணவர் பேரவையைச் சார்ந்தவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்!
  • இந்த மோதலை காரணம் காட்டி கல்லூரிகளில் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்க முயலும் அரசின் நோக்கத்தை முறியடிப்போம்!

அம்பேத்கர் சட்ட கல்லூரி பிரச்சனையையொட்டி புமாஇமு-வின் ஆர்ப்பாட்டங்கள், பிரசுரங்கள், தமிழரங்கம் (TamilCircle) மற்றும் வினவு கட்டுரைகள் பின் வருமாறு.

Related Links:

Thursday, October 9, 2008

ஈழத் தமிழர் கொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்



சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் 8- 10- 2008 அன்று காலை பத்து மணியளவில் மகஇக, புமாஇமு, புஜதொமு, பெவிமு அமைப்பினர், ஈழத் தமிழர் கொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். சாலையில் அமர்ந்து முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்த 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் முழக்கங்கள்:

  • ஈழத் தமிழர் கொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசை முறியடிப்போம்!
  • ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு குரல் கொடுப்போம்!
  • தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க கச்சத்தீவை மீட்டெடுப்போம்!
  • பதவி சுகத்திற்காக பச்சோந்தி வேலை செய்யும் திமுக அரசை அம்பலப்படுத்துவோம்!
  • இந்திய ஆளும் வர்க்கங்களின் தெற்காசிய மேலாதிக்கத்திற்காக டாட்டா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் இலங்கையில் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக, சிங்கள இனவெறி இராணுவத்திற்கு ஆயுதமும், பயிற்சியும் கொடுத்து உதவும் கொலைகார இந்திய அரசை எதிர்த்து போராடுவோம்!


Related Links:




Sunday, September 28, 2008

கொலை வெறிநாய் பாஜக - பெதிக தொண்டர்களை தாக்கி, வண்டியை கொளுத்தி அட்டகாசம்


சேலத்தில் 27-09- 2008 அன்று ராஜ்நாத்சிங் வருகையை எதிர்த்து பெரியார் திராவிட கழகத்தினர் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இங்கு வரக்கூடாது என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைப் பார்த்த பாஜகவினர் திரண்டு வந்து ரவுடித்தனத்தில் இறங்கினர். பெரியார் திக தொண்டர்களை பாஜகவினர் சரமாரியாக தாக்கினர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இதனை வேடிக்கை பார்த்த காவல் துறையினர் பெரியார் திக தொண்டர்கள் சுமார் 125 பேர்களை கைது செய்தது.

தமிழகத்தை மதவெறி களமாக மாற்ற காவி அமைப்புகளான இந்து முன்னனி, ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆங்காங்கே சர்ச்களை சேதப்படுத்தி வருகிறது. அம்பேத்கர், பெரியார் சிலைகளை சேதப்படுத்துவது, சிறுபான்மையினரை தாக்குவது, என்று திட்டமிட்டு கொலைவெறியாட்டம் போடுகிறது.

இந்த நாய்களுக்கு நாளுக்கு நாள் வெறி முற்றி வருகிறது. இதை கண்டித்து ஜனநாயக அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்தால் கொலை தாக்குதல் நடத்துகிறது. இது "அமைதி பூங்கா" தமிழக மக்களுக்கு விடப்பட்ட சவாலாகும். இனியும் அமைதியாக இருந்தால், நேற்று குஜராத், இன்று ஒரிசா, நாளை தமிழகம் பிணக்காடாக மாறும்.

பெரியாரின் போர்குணமிக்க பார்ப்பனீய எதிர்ப்பு மரபை கொண்ட தமிழகம், காவிப்படையினரை (இந்து முன்னனி, ஆர்.எஸ்.எஸ், பாஜக) அம்பலப்படுத்தி, தமிழ்நாட்டை விட்டே துரத்துவோம்.

Related Links

Monday, September 8, 2008

கும்மிடிபூண்டி SRF ஆலை புகுந்து தாக்கிய போலீசு - புஜதொமு கண்டன ஆர்ப்பாட்டம்



கும்மிடிபூண்டி SRF ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்த்து உள்ளிருப்பு போராட்டம் நடத்திய போது, போலீசு அவர்களை தாக்கியது. இதை எதிர்த்து 08-09- 2008 அன்று மெமோரியல் ஹால் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Links:

Friday, September 5, 2008

பார்ப்பனிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் - இந்து என்று சொல்லாதே, பார்ப்பான் பின் செல்லாதே



கோவை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் சீமானுக்கு எதிராக கலவரம் நடத்திய இந்து மதவெறியர்களை கண்டித்து 02.09.2008 அன்று சென்னை மெமோரியல் அரங்கம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட்ம் நடைபெற்றது. இதில் மகஇக அணிகள் (புமாஇமு, புஜதொமு) உள்பட பல்வேறு பெரியாரியக்க தோழர்கள் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தின் முழக்கங்கள் மற்றும் படங்களை கீழ்கண்ட வே.மதிமாறன் தளத்தில் பார்க்கவும்.

இந்து மதவெறியர்களை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்